எப்படித்தான் தாங்குகிறதோ...!?
இத்தனைப் பெருமைகளை..
பாரதம் பலமானது தான்....!
என் பாரதம் பலமானது தான்...!!
ஒன்றிரண்டோ ஓராயிரமோ அல்ல !
இதன் பெருமைகளை வாய்விட்டுச் சொல்ல !!
சிறந்த இராணுவத்திலும்,
செயற்கைகோள் செலுத்துவதிலும்,
ஐந்தாம் இடம் !
ஆனால்,
மனிதரை வாழவைப்பதில்
இரண்டாம் இடம் !
ஆம்!!
மக்கள் தொகையில் இது இரண்டாம் இடம் !!
சில நாடுகளுக்கு,
அதன் பழமை தான் பெருமை
சிலவற்றுக்கோ புதுமையால் பெருமை
புதுமையில் பழமை காண்பதே,
என் பாரதத்தின் தனிப் பெருமை..!
சரியான வானிலை,
நலமான நீர்வளம்,
எண்ணற்ற தொழிற்சாலை,
ஏராளமான விளைநிலம்,
எத்தனையோ மதங்கள்,
எண்ணிலடங்கா மொழிகள்,
வரலாற்று சின்னங்கள்,
வற்றாத நதிகள்,
அழகிய மலைகள்,
அன்பான மக்கள்,
ஆகா!!!
என் நாட்டின் சொத்துக்கள்
எத்தனை..! எத்தனை..!
பண்பாட்டின் பிறப்பிடமே...!
உலகின் உதாரணமே...!
அன்னை பாரதமே...!
என் உயிரே...!!!
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்,
பிறக்க வேண்டும் உன் மடியில்,
மீண்டும் ஒரு முறை...!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)