எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

என் பேனாவுக்கும் எனக்கும் சண்டை!
























 






தடக்கென நான் அதன்
தலைக்கவசம் கழற்ற...
கொட்டாவி விட்டபடி
கவிதையா? என்றது...

ஆம்! எனச் சொல்லி..
அணைத்தேன் விரல்களால்...
அதன் இதழ் கொண்டு தாள் இணைத்தேன்...

அரை தூக்கம் போல...?!
அரைகுறையாய் பதிந்தது...

வழக்கம் போலவே,
'அவள்' எனத் துவங்க...
"இன்றைக்கும் காதலா..?!" - என
ஓரமாய் பார்ப்பது போல்..
ஒரு சாய்ந்து நின்றது...!

சரி!
வேண்டாம் காதல் இன்று...!
வடிப்போம் வேறு கவிதையொன்று..
என்றே நான்...

நிலவில் துவங்கி...
மழை, ஈழம், வானவில், விலையேற்றம்..
என,
என்னென்னவோ தலைப்பில்..
ஏதேதோ துவங்கி...
எழுதி...
கிறுக்கி...
அடித்து..
இப்படி நீண்டு கொண்டேயிருக்க...

கோபமாய் கொந்தளித்து...
கோடெல்லாம் கொப்பளித்து...
'நீலக் கோடி வடித்து'!
முறைத்ததேன் பேனா!

இது என்ன கோபம்?!
உனக்காக அல்லவோ,

'காதலை, கவிதையில் இன்று துறக்க துணிந்தேன்'..?
என,
கண்ணருகே கொண்டுவந்து,
கனிவுடனே பார்த்தேன்!

"சொல்வதெல்லாம் சுத்த பொய்..
காதலை விடுத்து கவிதைகள் வடிக்க,
உனக்கு இஷ்டமில்லை...
இதயத்தின் இடுக்குகளிலும்..
மூளையின் மடிப்புகளிலும்..
பரவசமாய் பரவிக் கிடக்கிறது உன் காதல்!
நீ அவளோடு இரு...
என்னை விடு..!!"
என்று எண்ணியதோ என்னவோ?
தற்கொலைக்கு முயல்வது போல்...
தரை நோக்கிச் சென்றது!

பரிதவிப்பாய் குனிந்து,
பதற்றமாய் பற்றினேன்...
'என் இருப்பத்தியோரவது விரலை...
இதயத்தோடு அணைத்தேன்!'

தைரியம் சொன்னேன்..
அணைப்பில் ஆறுதல் சொன்னேன்...

'மை கொட்டும் உன் மேல் தான்..,
முதல் மையல் எனக்கென்றேன்!'




உன்னை என்னிருந்து பிரித்துப் பார்ப்பதும் ஏனோ..?
நம் காதல் உனக்கிங்கு கசப்பது முறையோ?
எனக்கு முன்பே கவிதையின் வாயிலாய்,
நீ அவளுக்கு பரிட்சயம் என்பதை மறந்தாயோ?

காதல் என்னுடயதேன்றால், அதன் வடிவம்
உன்னுடையதன்றோ?!
எண்ணம் என்னுடையதென்றால், எழுத்து
உன்னுடையதன்றோ?!


 






'என் கண் போல..
பேசும் வாய் போல...
ஸ்பரிசிக்க வைக்கும் கை போல...
என் காதலைச் சொல்லும்...
இன்னொரு புலன் நீ..!!!'

என்னை காதலித்தால்..
உன்னையும் சேர்த்தே அவள் காதலிப்பதாய் பொருள்!
இப்படி நீ கோபிப்பது..
உன் காதலிக்கே நீ செய்யும் துரோகமன்றோ?!

இதை நீ,
உணராயோ?
இனியேனும் உணர்வாயோ?

என்று,
உணர்ச்சிமயமாய் உருகிமொழிந்தே
பேனாவை கிடத்தி கிளம்பிச் சென்றேன்!





பாவம் என் பேனா!
தலை குனிந்து நிற்பது போல்,
தலைகீழாய் கிடந்தது!


 





பின்னிரவில்,
அரைமயக்க பிம்பத்தில்,
யார் கொண்டு சேர்த்தார்களோ?
எனைப் பார்த்தபடி...
என் அருகே.. என் பேனா..!

மயக்கும் அதன் மையின் நெடி..
மூச்சில் கலந்து, மூளைக்குச் செல்ல,
இதழ் மலர்ந்தது... இமை மடிந்தது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்