எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

புரியாத புதிர்......?!?!?!?!!! (An unknown puzsle!)



கற்கண்டு,
பகற்கனவு,
நற்சான்றோர்,
தற்பெருமை!

முள்வேலி,
முயற்குட்டி,
முற்பிறவி,
முழுநிலவு!

சுண்ணாம்பு,
கண்ணாடி,
மைப்பேனா,
கையிறுப்பு!

பச்சரிசி,
பளிங்குதரை,
புற்றீசல்,
புவியீர்ப்பு!

அறிந்த வார்த்தைகள் – இங்கே
அர்த்தமற்ற வரிசையில்!
புரிந்த சொற்கள் –இங்கே
பொருளற்ற பிணைப்பில்!
விரும்பும் கவிதை-இங்கே
விரும்பாத வடிவத்தில்!

இப்படித்தான் வாழ்க்கையும்....!!!!!

அறிந்ததை அர்த்தமற்றதாக்கும்!
தெரிந்ததை தேவையற்றதாக்கும்!
பொருளற்று பிணைத்து,
‘விதி’ விடுத்து இணைத்து,
நாம் விரும்பாத போதும்
பதில் கேட்க்கும்!!

ஓர் புரியாத புதிர் போட்டு.....!?!?!?!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்