எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

தனிமை.... (I'm alone again:( )


ஞாயிற்றுக்கிழமை..
பௌர்ணமி இரவு..
பூமிக்கு நிலவு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தது.
நள்ளிரவின் நிசப்தத்தை தெருவோர நாய்களும், கூர்காவின் விசிலும் குலைத்துக் கொண்டிருந்தன.
A/Cன் செயற்கையான குளிரில் Laptopஉடன் உறவாடிக் கொண்டிருந்த 'சம்பத்குமாருக்கு' வயது 26. இந்தியா முழுவதும் தனது ஆறு கிளைகளை பரப்பிக் கொண்டிருந்த 'Sambath Group Of Companies'ன் நிர்வாக இயக்குனர்.
அரட்டை அடிக்கும் நண்பர்கள், ஞாயிற்றுக்கிழமை சினிமா என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு பிசினஸ் உடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவன். பெரிய ஜோக்குகளுக்கு கூட சிறியதாய் சிரிக்காத கண்டிப்பான பேர்வழி!
பாலிவுட் கதாநாயகர்களைப் போன்ற மீசை இல்லாத முகம், தெளிவான கண்கள், பணக்கார உடல்!
'Beep' அவனது கவனத்தை சிதறடித்து முனங்கியது செல்போன். Lapatopல் இருந்து கண்களை அகற்றி செல்போனின் SMSஐ படித்தான் சம்பத்.
"Love has no reason,
If it has, It is not Love"
-munbu Shakespeare, ipothu naan
Gud ni8.. swt drms..
திவ்யா... அவனது அனுமதி கேட்காமலே அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன.. சம்பத்தின் கண்கள் மகிழ்ச்சியால் அகல விரிந்தன.. அவனது ஒவ்வொரு நரம்பிலும் ஹார்மோன்கள் நடனமாடத் துவங்கின! 'அவளது' பெயரை உச்சரித்ததால் பெருமை கொண்டது போல் அவனது உதடுகள் புன்முறுவல் பூத்தன..
திவ்யா... திவ்யா... அவனது இதயம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது!
திவ்யா - BBA பட்டதாரி, சம்பத்தின் அலுவலகத்தில் 'Customer Management' பதவி அவளுக்கு, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நீண்ட கண்களும், எந்த ஒரு சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக மாற்றும் செய்கைகளும், பாரபட்சமின்றி அனைவரிடமும் பழகும் வெகுளித்தனமும் அவளது அடையாளங்கள்!.அலுவலகத்தில் சேர்ந்த முன்றே மாதத்திற்குள் சம்பத்தின் இறுக்கமான அலுவலகத்தை , கல்லூரி வகுப்பறை போல கலகலப்பாக மாற்றியவள்.
Interviewவின் போது அனைவரும் டென்ஷனாக அமர்ந்திருக்க, இயல்பாக கைகளில் பேனாவை சுழற்றி ரசித்து, விளையாடிக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்த முதல் பார்வையிலேயே சம்பத்துக்கு பிடித்துவிட்டது .
"சம்பத்...! நான் உங்களை பெயரை சொல்லி கூப்பிடுறதுல உங்களுக்கு ஆட்ச்சேபனம் இல்லையே ?"- சம்பத்தை அலுவலகத்தில் முதன் முதலில் பெயரை சொல்லி அழைத்தப்பெண் திவ்யா .
ஒரு முறை ஒரு முக்கியமான mail-க்கு திவ்யா பதிலளிக்காமல் விட்டு விட, அவளைக் கூப்பிட்டு கோபமாக கேட்டான் சம்பத்... சுண்டு விரலை பல்லால் கடித்துக்கொண்டு, கொஞ்சல் பார்வையுடன்... குலைவாய் அவள் .'cool boss, இப்ப அனுப்பிடுறேன், "less tension more work" என செந்தில் பாணியில் சொல்ல , சிரித்தே விட்டான்.
விவரம் தெரிவதற்கு முன்பே தன் தாயை இழந்து விட்டிருந்த சம்பத், பள்ளிப் படிப்பை ஊட்டி ஹாஸ்டல்களிலும், பின் MBA வரை இங்கிலாந்திலும் முடித்து விட்டு தனிமையை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். சம்பத்தின் தந்தை எத்தனையோ முறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய மறுத்து, அவரை டெல்லி அலுவலகத்தில் இருக்கச் செய்துவிட்டு , சம்பத் சென்னையில் தனிமையாய் வாழ்ந்து வந்தான்.
சம்பத்தின் வாழ்வில் எல்லாம் கிடைத்தது அவன் நினைத்ததெல்லாம் நடந்தது, சொல்லியதை செய்ய எத்தனையோபேர் இருந்தனர், நினைத்ததை முடிக்க பணம் இருந்தது, சமூகத்தில் பெரிய பெயர் இருந்தது. ஆனாலும் அவன் வாழ்வின் ஒரு பகுதி எப்பொழுதும் வெறுமையாகவே இருந்தது!
திவ்யா, அந்த இடத்தை மெல்ல மெல்ல நிரப்பிக் கொண்டிருந்தாள். அன்பு, பாசம், காதல் என்ற உணர்ச்சிகளே இல்லாமல் அவன் மனம் பாலைவனமாய் வறண்டிருந்தது, திவ்யா நீரூற்றாய் பெருகத் துவங்கியிருந்தாள்!
எத்தனையோ சூரியன்களால் போக்க முடியாத அவன் மன இருளை, திவ்யா ஒற்றை நிலவாய் ஒளியேற்றிக் கொண்டிருந்தாள்!
நேர்க்கோடாய் இருந்த சம்பத்தின் வாழ்வை,வளைந்த கோடுகளாய் மாற்றி வர்ணக் கோலங்கள் போடுக் கொண்டிருந்தாள்!
இப்பொழுது சம்பத்தும் ரொம்ப மாறியிருந்தான். தனக்கு பிடித்த பச்சை நிறத்தை விடுத்து, திவ்யாவுக்கு பிடித்த ஊதா நிறத்தை அணிந்து வந்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் beachற்கு சென்று திவ்யாவை நினைத்துக்கொண்டே சுண்டல் சாப்பிட்டான். NDTVக்கு பதிலாக கமல்ஹாசனின் காதல் பாடல்களையும், வடிவேலுவின் ஜோக்குகளையும் ரசிக்கத் துவங்கினான். இக்கட்டான நேரங்களில் கூட அலுவலகத்தில் கோபப்படாமல் நிதானமாக முடிவெடுத்தான்.
அவனது உதட்டில் புன்முறுவல் எப்பொழுதும் ஒட்டியிருந்தது. அவனது ஓரக் கண்கள் திவ்யாவை ரசித்துக் கொண்டே இருந்தன!
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை சம்பத் தனியாக கடற்கரையில் அமர்ந்திருக்க, திவ்யா திடீரென பின்னாலிருந்து கண்களைப் பொத்தினாள்.
திவ்யா, யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
சம்பத் அப்பொழுது ஏழாவது சொர்க்கத்தில் இருந்தான்! அவனுக்குத் தெரியாதா? அது திவ்யா என்று?!
சம்பத், தி..வ்..யா.. ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்தான்.
சற்றும் யோசிக்காமல் சம்பத்தின் அருகில் அமர்ந்தாள். சம்பத், நீங்க beachக்கு கூட வருவீங்களா?, ஆபிஸ்ஸ விட்டு எங்கயும் போக மாட்டீங்கன்னு கேள்விப்பட்டன்
சம்பத்தின் மனம் ஆயிரம் ஆயிரம் பதில்களை சொல்ல நினைத்தது. ஆனாலும் சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக அளித்தான்.
சம்பத், நீ வாரவாரம் இங்க வருவியா..?
திவ்யா, இல்ல பாஸ் எப்பவாவது ப்ரெண்ட்ஸோட வருவன். மெரினாவில் ஒரே லவ்வர்ஸ் மயம், அதனால நானும் யாரையாவது லவ் பண்ண ஆரமிச்சவுடன தான் அடிக்கடி வரணும்னு முடிவு பண்ணிருக்கேன் கண்ணடித்து கிண்டலாகச் சொன்னாள்.
நீங்க எப்படி சம்பத்? Any love affiars..? இல்ல சும்மா சைட் அடிக்க வந்தீங்களா? இயல்பாகக் கேட்டாள்.
சம்பத்திற்கு ஒரு நிமிடம் நீ என்னைக் காதலிக்கிறாயா? என நேருக்கு நேராக கேட்டு விட வேண்டும் போலத் தோன்றியது. ஏதோ ஒன்று தடுக்க, இப்போதைக்கு இல்ல, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? என்றான்.
பாஸ், உங்க பதில பாத்தா already யாருக்கோ ஹார்ட்ட கொடுத்துட்ட மாதிரி தெரியுது, சீக்கிரம் லவ்வ சொல்லிருங்க பாஸ், இல்ல சினிமால வர்ற மாதிரி கடைசி வர சொல்ல முடியாமலே போயிறப் போகுது தோழிகள் வர திவ்யா விடை பெற்றுக் கொண்டாள்.
அன்றிலிருந்து , சம்பத் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான் அவன் பிசினஸில் சிறு வயதிலேயே சாதித்த புத்திசாலி என்றாலும் கூட, திவ்யாவிடம் நேருக்கு நேராகப் பேச தயங்கினான்.
'திவ்யா ஒரு வேளை மறுத்துவிட்டால் ...', அந்த எண்ணமே அவனுக்கு வேதனையளித்தது. மனம் வேறெதிலும் ஈடுபட மறுத்தது. அவன் அறிவையும், இதயத்தையும் திவ்யா முழுவதுமாய் ஆகிரமித்துக்கொண்டிருந்தாள்.
மூன்று நாட்களுக்கு முன்பு, திவ்யா சம்பத்தின் அறைக்கு வந்தாள்,
திவ்யா, "சம்பத், நாளைக்கழிச்சு அண்ணன் பையனுக்கு திருநெல்வேலியில் இருக்குற குலதெய்வம் கோவில்ல மொட்ட போடுறாங்க",
சம்பத் , "சோ?" சிரித்துக்கொண்டே கேட்டான்.
திவ்யா, "சோ ...எனக்கு three days leave வேணும்".
சம்பத் விளையாட்டாக "மொட்டைஉனக்கா, உங்க அண்ணன் பையனுக்கா ...?
திவ்யா செல்லமாக முறைத்தாள்.
திவ்யா 'இல்ல boss, அத்தை முறைக்கு நான் தான் போய் அய்யனாருக்கு பொங்கல் வைக்கனுமாம்'.
சம்பத், "ok, leave granted".
திவ்யா"thank you, boss". "Boss, உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்"...
திவ்யா தயங்கி தயங்கி இழுத்தாள் ...
"இல்ல இப்ப வேண்டாம், திங்கள்கிழமை நான் surpriseஆ சொல்றேன், நான் ஒன்னு கேட்பேன் நீங்க கண்டிப்பா ok சொல்லணும், நீங்க ok சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும்", செல்லமாக கண்சிமிட்டிச்சென்றாள்.
சம்பத், மீண்டும் ஒரு முறை smsஐப் படித்தான், "Love has no reason...", 'நாளை திங்கட்கிழமை, திவ்யாவின் surprise எதுவாக இருக்கும் ...? ஒரு வேளை... நம்மைப் போன்று அவளும்...', சம்பத்தின் உதடுகள் அகலமாய் விரிந்தன. அந்த surprise எதுவாக இருந்தாலும் சரி தன்னுடைய காதலை நிச்சயமாக சொல்லி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.
Laptop திறந்திருந்தது
சம்பத்தின் உதட்டில் இன்னமும் புன்முறுவல் தவழ்ந்து கொண்டேயிருந்தது. அவன் கண்கள் மூடியிந்தது... அவன் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
******************************************
பூமி சூரியனை பிரசுவித்து மூன்று மணி நேரம் ஆகியிருந்தது.சம்பத் திவ்யாவிற்காக, ஊதா நிற சட்டையுடனும், கருப்பு நிற கோட்டுடனும் ஆவலாய் காத்திருந்தான்.
தன் வாழ்வின் முக்கியமான திருப்புமுனை நிகழப் போவதாக அவனது உள் மனம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது.
இறுதியில் திவ்யா வந்தாள்...
சம்பத்தின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது ...
சம்பத், திவ்யாவை தனது அறைக்கு கூப்பிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, திவ்யா சம்பத்தின் அறைக்கு வந்தாள்...
திவ்யா,'Good morning, Boss'
சம்பத் ,'Very Good morning ,function முடிஞ்சதா ...?
திவ்யா, "ம்,ரொம்ப கிராண்டா !!!...
சம்பத் மனதை திடப்படுத்திக்கொண்டு சொல்ல முற்பட்டான்,
சம்பத், "திவ்யா...ஒரு விஷயம்..."
திவ்யா, "Boss..boss..office விஷயம் எல்லாம் அப்புறம், முதல்ல என்னோட surprise...
சம்பத், “ம் ..சொல்லு", சம்பத்துக்கு தெரிந்து திவ்யா முதன் முதலாக வெட்கப்பட்டாள்...
திவ்யா, “அது..வந்து..வர்ற 15ந் தேதி எனக்கு Marriage fix ஆயிருக்கு."
சம்பத்தின் உடலில் ஏதோ ஒரு நரம்பு பட்டென்று அறுந்தது போல் இருந்தது. அவனது உடல் அப்படியே அசையாமல் இருந்தது. அவனது உயிர், எங்கெங்கோ விவரிக்க முடியாத பயங்கரமான இடங்களுக்கு பயனித்துக்கொண்டிருந்தது.
"Chennaiல தான் Software engineerஆ இருக்கார், எங்களுக்கு தூரத்து சொந்தம், அப்புறம், எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததா..."
திவ்யா பேசிக்கொண்டே போனாள், சம்பத் உணர்ச்சியற்ற பதுமையாய் உட்கார்ந்திருந்தான்... திவ்யாவின் குரல் அதல பாதாளத்திலிருந்து வருவது போல் அவனது காதுகளில் விழுந்து கொண்டிருந்தது...
"பாஸ் என்னோட கல்யாணத்த நீங்க தான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கணும், மாட்டேன்னு சொல்லிராதிங்க",
திவ்யாவின் கடைசி வார்த்தை சம்பத்தின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
இரவாகியிருந்தது...சம்பத்துக்கு வாழ்க்கையே சூன்யமாய் போய் விட்டதாய் தோன்றியது. உலகமே வெறுமையாய் காணப்பட்டது... திவ்யாவின் கடைசி வார்த்தைகளைத் தவிர யார் பேசியதும் அவன் காதுகளில் விழவில்லை...எந்த ஒரு நிகழ்வும் அவன் மனதில் பதியவில்லை...
பிறந்தது முதல் அவனை விடாது தொடர்ந்து வந்த தனிமை, திவ்யாவால் மூன்று மாதங்களுக்கு தடைப்பட்டிருந்தது, இப்பொழுது மீண்டும் தனிமை அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. முந்தைய தனிமை சம்பத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை... ஆனால் திவ்யா விட்டுச் சென்ற தனிமை...?
சம்பத்திற்கு தான் ஒருவன் மட்டுமே பூமியில் இருப்பது போல் தோன்றியது. அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் தனிமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தது...
தெருவோர நாய் இன்று அதிகமாக குரைத்தது..
முழு நிலவு சற்று தேய்ந்திருந்தது..
மீண்டும் திவ்யாவின் SMS வந்தது....!

3 கருத்துகள்:

jeni 4 ஏப்., 2011, PM 2:20:00  

ungalathu padaipu miga arumai nanbare...

iruthiyil iruvaraum serthu vaithu irukalam, konjam kastamaga ullathu......

christy 13 பிப்., 2012, PM 9:47:00  

இந்த கதை மிக அருமையாக இருக்கிறது. இதை படிக்கும் பொது ஒரு சிறந்த நாவல் புத்தகத்தை படித்தது போல உணர முடிகிறது. மிக சிறந்த கதையை எங்களுக்கு தந்ததற்காக நன்றி. மேலும் சிறந்த படைப்புகளை எங்களுக்கு தர வேண்டும். நன்றி...

Rev Info Tech 18 பிப்., 2012, PM 2:55:00  

நிச்சயம் தருகிறேன் தோழி...

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்