நிசப்தம்!
சத்தமின்மை!!
அமைதிமயம்!!!
எங்கும் கருமை!
ஊரே வெறுமை!
வானம் முழுவதும் விண்மீன்,
என் வலதோரம் நிலவு!
தூரத்தில் கேட்கும் பாடல் – என்
மனதில் எப்போதும் தேடல்!
கண்களில் இல்லை தூக்கம் – என்
இதயம் முழுவதும் ஏக்கம்!
ஏக்கமா?!
இல்லை.. இல்லை...
அது என்னவள் தந்த தாக்கம்!
அவளுக்கோர் பெயர் உண்டு...
பறவையை ரசிக்க பெயர் எதற்கு?!
அவளுக்கோர் நிறம் உண்டு...
நீருக்கும், காற்றுக்கும் நிறம் எதற்கு?!
அவளுக்கோர் குரல் உண்டு...
கண்களால் பேச மொழி எதற்கு?!
அவளுக்கோர் குணம் உண்டு...
மாசற்ற பொன்னிற்கு குணம் எதற்கு?!
அவளுக்கோர் மனம் உண்டு...
அதில் நிச்சயம் எனக்கோர் இடம் உண்டு!!
அவள் கண்ணின் கவின் பாட,
கவிஞர்கள் இல்லை!
விழிகளோடு ஒப்பிட,
வாட்களும் இல்லை!
பார்வையின் பொருள் அறிய,
புத்தகமும் இல்லை!
கண்களால் பேசுவாள்!
கருத்தால் ரசிப்பாள்!
கன்னத்தால் கவருவாள்!
இதழால் மொழிவால்!
இதயத்தால் நேசிப்பாள்!
என்னை நேசித்தாள்,
நேசிக்க வைத்தாள்!
“என்னை தனதாக்கி, தன்னை எனதாக்கினால்!”
காதல் புரிந்தோம்!
கவலை மறந்தோம்!
காலத்தை கடந்து,
கற்பனையாய் பறக்கின்றோம்!
இப்பொழுது,
‘என் பாதி அவள், அவள் மீதி நான்!’
என் உயிர் அவளோடு,
அவள் உயிர் என்னோடு!
இரண்டு இருதயம்,
ஒரே துடிப்பு!!!
என் உயிரை எடுத்துச் சென்றதால்,
ஏங்குகிறேன்!?
அவள் உயிரை தந்து சென்றதால்,
தாக்கத்தில் தடுமாறுகிறேன்!
என் ஏக்கத்தை நீக்கி,
தாக்கத்தை போக்கும்,
ஒரே மருந்து,
எனக்காக துடிக்கும்,
என் கண்மணியின் இதயத் துடிப்பு!
அது துடிப்பல்ல, காதலின் பிரதிபலிப்பு!!!
3 கருத்துகள்:
உங்கள் கண்மணியின் இதயத்துடிப்பு என்றும் உங்களுடையதாகட்டும்
மிகவும் அருமையான படைப்பு
உங்கள் கண் மணியின் இதய துடிப்பு என்றும் உங்களோடு தான் இருக்கும்
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)