கடந்த செப்டம்பர் 5, 2010 எனது சகோதரனின் திருமணத்தின் பொழுது நான்
எழுதியளித்த வாழ்த்து மடல்!
எழுதியளித்த வாழ்த்து மடல்!
ஓயாது உழைக்கும் கடல் போல,
ஒரு நாளும் தவறாது 'கல்வி' கொள்க!
என்றைக்கும் ஒளிவீசும் கதிரவன் போல்,
எப்போதும் மங்காத 'அறிவு' கொள்க!
கற்றறிந்த சான்றோரின் மொழி போல,
காலத்தால் நீங்காத 'ஆயுள்' கொள்க!
அனைத்துலகையும் அதிர வைக்கும் 'அணு' போல,
அதீத 'ஆற்றல' கொள்க!
ஆதி அந்தமில்லா 'தமிழ்' போல,
அழியாத 'இளமை' கொள்க!
வானத்தை தாண்ட துடிக்கும் பறவை போல்,
வரையரையில்லா 'துணிவு' கொள்க!
இரண்டடியால் உலகாண்ட 'திருக்குறள்' போல்,
இணைந்திங்கே இருவரும் 'பெருமை' கொள்க!
தரமான செந்தேனின் சுவை போல,
தெளிவான 'பொன்' கொள்க!
அரும்பொருளாம் ஆண்டவனின் அருள் போல,
அளவற்ற 'பொருள்' கொள்க!
கனிவான கலைஞனின் கற்பனை போல்,
கரையற்ற 'புகழ்' பெருக!
பரந்த பெருமரத்தின் நிழல் போல,
பயனுள்ள 'நிலம்' கொள்க!
பிணிநீக்கும் பயனான மருந்து போல்,
பிறர்க்குதவும் 'நன்மக்கள்' கொள்க!
'ஈழத்தமிழனின்' இரும்பையொத்த இதயம் போல்,
இம்மியும் குறையா பெரும் 'நம்பிக்கை' கொள்க!
பூத்துக்குலுங்கும் புதுமலர் போல,
புன்னகை அணிந்து, 'நோயின்மை' கொள்க!
வானளாவ வளர்ச்சி பெற வேண்டுமெனில்,
தளர்ச்சி இல்லா 'முயற்சி' கொள்க!
முந்தைய மூவைந்தும் முடிவில்லாது பற்றி,
பிந்தைய வாழ்வுதனில் பெரும் 'வெற்றி' பெருக!
மொத்தத்தில் நீவீர் இருவரும்,
'தமிழ்' கூறும் ஈரெட்டும் பெற்று,
பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு,
ஊர் போற்றும் 'தேர்' போல
உயர்வாக வாழ்க!
1 கருத்துகள்:
மிகவும் நன்றாக இருந்தது
அதுவும் 16 செல்வங்களையும் குறிப்பிட்டு எழுதியது
அருமை
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)