கண்களால் உணர்த்த முடியாததை,
இதழ்களால் மொழிய முடியாததை,
நளினத்தால் புரிய வைக்கிறது,
'வெட்கம்'!!!
நளினத்தால் புரிய வைக்கிறது,
'வெட்கம்'!!!
கண்கள் கலந்து,
காதல் மிகுந்து,
ஊடல் துவங்க,
'வெட்கம்' - சற்று
வெட்கத்
தோடு விடை பெற்றது!
காணாத போது,
கைப்பேசி வழியே,
கணம் தோறும கலந்தோம்!
குரல் கேட்கா போதும்,
குறுஞ்செய்தி வழியே,
குறைவின்றி குலைந்தோம்!
சத்தங்களோடு,
முத்தங்களும் மொழிந்தோம்!
இதோ,
இன்று!
அருகருகே நிற்கின்றோம்!
உன் கண்ணில்,
எனைப் பார்த்து,
என் கண்கள்,
சிரிக்கிறது!
என் இதழின்,
நகை பார்த்து,
உன் இதழ்கள்,
ரசிக்கிறது!
இதுவரையில்,
இல்லாத 'புதுவெட்கம்',
எங்கிருந்தோ முளைக்கிறது!
உனைக்கண்டு நானும்,
எனைக்கண்டு நீயும்,
வெகுளியாய் வெட்கப்பட்டு நிற்க!!
நம்மின் காதல் கண்டு ரசித்து நிற்கிறது 'வெட்கம்'!!
1 கருத்துகள்:
கவிதைகள் மிகவும் அழகாக உள்ளது தோழனே!!!!
வெட்கம் என்பதை இரண்டு வரிகளில் புரிய வைத்த உனது படைப்பு மிகவும் அழகாக உள்ளது...
என் இனிய தோழனுக்கு வாழ்த்துக்கள்.....
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)