அழகான இந்த இரவினிலே...
அமைதியான இந்தப் பொழுதினிலே...!
அங்கே,
தூங்கிக் கொண்டிருக்கும் உன் கண்களுக்காக..
ஏங்கி... ஏங்கி...
இங்கே,
எனதிரு கண்களும் கண்ணீர் வற்றி..
வீங்கி நிற்கிறது?!
என் மீது காதல் கொண்ட உன் இதயத்தின் ஒலியின்றி...
உன் மீது காதல் கொண்ட என் இதயம் ஓசையின்றி வலிக்கிறது.....
என்னவளே...!!!
உன்னோடு பேசாத இந்தப் பொழுதினிலே..
பால் நிலவும் பகல் போல சுடுகிறது...
சுற்றும் பூமி சூனியமாய் நிற்கிறது...
அழகான தென்றல் அசைவின்றி தெரிகிறது..??!!
என் தேகம், என் பேச்சைக் கேளாது தவிக்கிறது..!
நெஞ்சை பிளக்கிறது...
இதயத்தை வதைக்கிறது...!!!
என் கண்ணே..!!!
உனை நினைத்து அழுதேன்....!
உனை நினைத்து அழுகிறேன்...!!
உனை நினைத்து அழுவேன்...!!!
அந்த துன்பத்திலும் எனக்கோர் இன்பம் உண்டு........
என் அன்பே..!!!
உனை நினைத்து மகிழ்ந்தேன்...!
உனை நினைத்து மகிழ்கிறேன்...!!
உனை நினைத்து மகிழ்வேன்...!!!
அந்த இன்பத்திலும் நிச்சயம் ஓர் துன்பம் உண்டு.......
என்,
இன்பமும் நீ, துன்பமும் நீ..
மகிழ்ச்சியும் நீ, சோகமும் நீ..
சிரிப்பும் நீ, கண்ணீரும் நீ..
சுகமும் நீ, வேதனையும் நீ..
என்,
உள்ளத்திலும் நீ, உணர்வினிலும் நீ..
உயிரினிலும் நீ, உடலினிலும் நீ..
என்,
பசியினிலும் நீ, வாழ்வின் ருசியினிலும் நீ..
சுவாசத்திலும் நீ, உயிர் நேசத்திலும் நீ..
அறிவினிலும் நீ, ஆழ் மனதினிலும் நீ..
ஆர்வமும் நீ, ஏமாற்றமும் நீ...
மொத்தத்தில் 'நீயின்றி நானில்லை'..!!!!
உயிரின்றி உடலில்லை.?!?!
மற்றொன்றும் நான் அறிவேன்...!?
'நானின்றி நீயில்லை' யென...........
இருப்பினும் தவிக்கிறேன்...?????!!!
என் தேவதையே....
உனை எண்ணி...
இந்த இரவினில் தனிமையாய்......
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)