அன்னையர் தினத்தன்று என் அன்னைக்கு பரிசாக எழுதியது
ஈரைந்து மாதங்கள்
கருவில் நமைத் தாங்கி
பத்தியங்கள் பல இருந்து,
கஷ்டங்கள் பல கடந்து,
உயிருட்டி,
உணவுட்டி,
உணர்வுட்டி,
நம்மை சிருஷ்டிக்கும் அந்த சிறந்தவள்
இறைவனினும் மேலானவள் தான்...!
சமயத்தில் இறைவன் அழிக்கவும் செய்கிறானே..?!
ஆக்க மட்டும் தெரிந்த இந்த அன்பு தேவதை
இறைவனினும் மேலானவள் தான்...!
சிறு குறும்புகளை ரசிக்கும்
ரசிகை அவள்..! - நம்மின்
சிறு தவறுகளை கண்டிக்கும்
ஆசான் அவள்..!
அணைக்கவும் செய்வாள்!
சமயத்தில் அடிக்கவும் செய்வாள்!
அடித்தப்பின், மனம் வருந்தி
அழுதிடவும் செய்வாள்...!
உதிரம் கொடுப்பவள் அவள்! - நமக்கு
உலகை உணர்த்துபவள் அவள்!
உன்னதமான உறவு அவள் !
தன்னலமில்லா தனையள் அவள் !
நமக்கு வலித்தாள் அவள் அழுவாள் !
நமது மகிழ்ச்சியில் அவள் சிரிப்பாள் !
கண்முன் நாம் காணும் கடவுள் அவள் !
கண் கலங்கும் போது துடைப்பவள் அவள் !
ஆயிரம் சொந்தங்கள் அவணியில் வந்தாலும்,
இவளுக்கோர் ஈடில்லை..!
இவளுக்கீடேதுமில்லை..!!
ஈன்றவளை எக்காலத்தும் மதிப்பவரை மனிதனென்பேன்...!
மற்றவரை மிருகம் எனவும் மாட்டேன்
அவர்கள் அதனினும் ,
இழிந்தவர்களாதலால்...!
2 கருத்துகள்:
உனது கவிதை என்னை மெய் சிலிர்க்க வைத்தது ...
ஒரு நொடியில் என் நினைவை இழந்தேன்..
என் இனிய தமிழ் நண்பனுக்கு தமிழ் மூச்சுடன் என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் ...
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)