நீ இல்லாத நாட்கள்...
நிறமற்ற பூக்களாய்,
எந்தன் நந்தவனம்!
ஒளியற்ற வின்மீன்களாய்,
எந்தன் வானம்!
நீ இல்லாத நாட்கள்...
வலுவற்ற அசைவுகளாய்,
எந்தன் சிறகுகள்!
உறங்காத கண்களாய்,
எந்தன் இரவுகள்!
நீ இல்லாத நாட்கள்...
இசையற்ற சொற்களாய்,
எந்தன் பாடல்!
பொருளற்ற பக்கங்களாய்,
எந்தன் புத்தகம்!
நீ இல்லாத நாட்கள்...
முளைக்காத செடிகளாய்,
எந்தன் விதைகள்!
பதிக்காத பாதங்களாய்,
எந்தன் பாதை!
நீ இல்லாத நாட்கள்...
எழுதாத எழுத்துக்களாய்,
எந்தன் பேனா!
துடிக்காத தசைகளாய்,
எந்தன் இருதயம்!
மொத்தத்தில்,
‘நான்’ இல்லாத ‘என்’னையும்
அந்த,
‘என்’னுள் உன்னையும் கண்டேன்!
நீ இல்லாத நாட்களில்..!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)