அத்தனை கூட்டத்திலும்,
அழகாக அழைக்கிறது
அந்த ஒலி!
நித்திரையின் நடுவினிலும்,
நிதர்சனமாய் நெருடுகிறது
அந்த ஒலி!
பரந்த பூமியெங்கும்,
பால்நிலா போல் பொழிகிறது
அந்த ஒலி!
முப்பொழுதும் எப்புறமும்,
முத்தாய்ப்பாய் மிளிர்கிறது
அந்த ஒலி!
காற்றிலே கலந்து,
என் மூச்சாகி நிற்கிறது
அந்த ஒலி!
ஆழ்கடலின் அடியடைந்து,
அங்குமிங்கும் சிதற்கிறது
அந்த ஒலி!
எற்றிசையும் எங்கெங்கும்,
எதிரொலித்து நிற்கிறது
அந்த ஒலி!
காதில் நுழைந்து,
நாளத்தில் வழிந்து,
இதயத்தை நிரப்புகிறது
அந்த ஒலி!
சொல்லிய இத்தனை போல்,
சொல்லாத எத்தனையோ உருவெடுத்து,
சுற்றும் பூமியுள்
சுற்றி சுற்றி வருகிறது
அந்த ஒலி!
எந்த ஒலி???!
திகட்டாத தீங்கரும்பாய்,
இனிக்கின்ற இதழ்கொண்ட
செதுக்காத சிலை வடிவாம்!
என்னவளின்
எடுப்பான பாதங்களில் - துள்ளி
துடுக்காக நடைபோடும் – வெள்ளி
கொலுசெழுப்பும் அந்த செல்ல ஒலி!!!
அது ஓலி அல்ல!?
அவள் என்னைக் கொஞ்சும்
காதல் மொழி!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)