இந்த ஒற்றை சொல்லில் ஏனோ அத்துனை பெரிய காந்தசக்தி ஒளிந்திருக்கிறது!! இதோ.., இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னையும் சரி, படித்துக் கொண்டிருக்கும் உங்களையும் சரி.. 'காதல்' உச்சரித்த மாத்திரத்தில் பரவசமடைய வைக்கிறது!!
ஆண்டவனில் தொடங்கி நீங்கள், நான் என அத்தனை பேரையும் (ஹிட்லர் உள்பட!), இந்தக் காதல் ஆட்டிபடைத்திருக்கிறது!
இந்த பூமியின் மொத்த உயிரனைத்தையும் பிணைத்திருக்கும் ஒரே மந்திரச்சொல் "காதல்"...!
'காதல்'... இதயத்திற்கு கட்டப்படும் இறக்கை... மனதிற்கு சூடப்படும் மகுடம்.. நெஞ்சினில் நடப்படும் நந்தவனம்...
இவ்வளவு ஏன்?! உச்சி வெயிலில் உட்கார்ந்திருக்கும் ஒருவனையே.. இப்படி கவிதை நடையில் எழுத வைக்கிறதே.. இது தான் காதலின் மகத்துவம்!
“காதல்” என்பது... அது சரி! இதோடு 11வது முறையாக அண்ணனின் பெயரை தாங்கி, கைப்பேசி கதரிக்கொண்டிருக்கிறது! (இங்கேயும் காதலுக்கு தடங்கலா!?) இனியும் நான் தாமத்தித்தால் அண்ணனே நேரில் வந்து கதற கதற அடிக்ககூடும்..!!!
இப்போதைக்கு விடை பெறுகிறேன்.. இக்கட்டுரையை விட்டு மட்டும்... காதலை விட்டல்ல!!! (நான் விட்டாலும் காதல் என்னை விடாது என்பது வேறு விஷயம்!)
கிறுக்கல் தொடரும்....
1 கருத்துகள்:
'காதல்'... இதயத்திற்கு கட்டப்படும் இறக்கை... மனதிற்கு சூடப்படும் மகுடம்.. நெஞ்சினில் நடப்படும் நந்தவனம்...
அருமை அருமை நண்பா!!!!!!!
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)