மன மகிழ்வான மாலை நேரம்... தோழி ஒருவள் எதர்ச்சையாக மல்லிகைப் பூவைப் பற்றி பேச.. மனம் அந்த மலர்களோடு பயணிக்கத் துவங்கியது... என் உடல் நுகர்ந்து, மனம் மகிழ்ந்ததை.. இதோ, இங்கு வார்த்தைகளாய் வடித்துள்ளேன்...
செடியின் மடியில்
தவழும் தேன்குடம்!
தென்றலின் ஊஞ்சலில்
ஆடிடும் சிறுநிலா!
நறுமணம் வீசி
நகைக்கும் நங்கை!
பெண்கள் சூடும்
வெள்ளைத் தங்கம்!
மண்ணில் முளைத்து
மிளிரும் வைரம்!
சின்ன சின்னதாய்
சிரிக்கும் மேகம்!
படர்ந்து விரிந்து
ஒளிரும் பனித்துளி!
மகரந்தம் கக்கி
மனம் ஈர்க்கும் காதலி!
மல்லிகை!!!
மலர்களே சூடும், மலர்களின் மகுடம்!
3 கருத்துகள்:
மல்லிகை பூவுக்கு உயிர் கொடுத்த பெருமை உங்களுக்கே....
தமிழ் வாழ்க உன் தமிழ் தொண்டு வளர்க!!!
மல்லிகை பூவின் மனம் என்னவெல்லாம் பேச வைக்கும் என்பது இங்கே தெரிகிறது !!!
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)