எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

இனி இல்லை...! (No more!)

இக்கவிதையின் கடைசி வரிக்காக காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..!

நொடிக்கு நூறுமுறை,
நினைத்து நினைத்து என்னை,
நெகிழ்ந்த அவள்,
இனி இல்லை!

செல்லமாய் எனைக் கொஞ்சி,
சின்னதாய் கோபம் காட்டி,
அழுது,
சிரித்து,
சிரிக்க வைத்து..
அது கண்டு ரசிக்கும் அவள்
இனி இல்லை...!

காதுமடல் திருகி,
கண்ணமெல்லாம் வருடும்,
கைகோர்த்து நான் நடந்த விரல்கள்..
இனி இல்லை...!

ஈரம் சொட்ட சொட்ட...
என்னை முத்தமிட்ட..,
இதமான அவளின் இதழ்கள்,
இனி இல்லை...!

தான் சுவைத்து,
பின் படைத்து..
நான் உண்ட,
பின் உண்ணும..
மென் நாக்கும், வெண் பற்களும்
இனி இல்லை...!

தன்னையே தலையனையாக்கி..
தலைகோதி துங்கவைத்து,
தன்னினும் என்னையே,
எப்போதும் நேசித்த அவள்
இனி இல்லை...!


சுற்றும் பூமி – இங்கே,
சூனியமாய்த் தெரிய
என்னை,
சுற்றி சுற்றித் திரிந்த அவள்
இனி இல்லை...!

நிழல் போல இருந்தவளை,
அனல் திங்க பார்த்திருந்தேன்!

புகையாகி போனவளை,
பூமியெல்லாம் தேடுகிறேன்!

இல்லையென தெரிந்திருந்தும்,
இயற்கையெல்லாம் அறிந்திருந்தும்..
பாவை உனை தேடுகிறேன்...
பைத்தியம் போல் பிதற்றுகிறேன்!

பாவி எந்தன் துயர்துடைக்க..,
உன் போல,நான் வளர்க...
மகளாக பிறப்பாயோ?!

உன் திருவயிற்றில் எனை வளர்த்த தாயே!

2 கருத்துகள்:

சுவர்ணலதா 19 மார்., 2012, PM 11:08:00  

கவிதைக்காக கண்ணீர் சிந்திய முதல் கவிதை
"இனி இல்லை" ...

christy 1 ஏப்., 2012, PM 2:55:00  

இனி இல்லை என்று சொல்லாதீர்கள்...! நம் அன்னை நம்முடன் தான் இருக்கிறாள். நம் மனதினுள்....!

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்