உன் வயிற்றில்
எனை உதிர்த்தாய்!
நான் மலர்வதற்குள்,
ஏனம்மா நீ உதிர்ந்தாய்?
வளர்பிறையாய் எனை வளர்க்க,
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய்!
முழுமதியாய் நான் மாற்வதற்குள்,
ஏனம்மா நீ தீய்ந்தாய்?
சிலையாக எனை செதுக்க,
வலி தாங்கும் உளி ஆனாய்!
சிற்பமாய் நான் சிரிப்பதற்குள் ,
ஏனம்மா நீ பலியானாய்?
ஆறுகுளம் ஏரியென,
அத்துனையும் கடக்க வந்தாய்!
நீந்த நான் கற்பதற்குள்,
ஏனம்மா விட்டுச் சென்றாய்?
கைப்பிடித்து நடக்க வைத்தாய்!
கதை கூறி உறங்க வைத்தாய்!
கண் விழித்து நான் பார்பதற்குள்,
ஏனம்மா நீ மறைந்தாய்?
விதைவிதைத்து நீர் வார்த்தாய்!
உரமிட்டு பயிர் காத்தாய்!
விளைந்திங்கே நான் நிற்க,
விதைத்தவளே நீ எங்கே?
இறை செய்த பிழை தானோ?
விதி செய்த சதி தானோ?!
நதி போல நீர் பெருக்கி,
கதியற்று கண் கலங்கி,
நீ பெற்ற நான் இருக்க...
நீ மட்டும் இல்லையம்மா?!
நீயில்லா உலகிதிலே,
நான் தனியே என்ன செய்வேன்?
பெருமரமே வீழ்ந்தப் பின்னால்,
சிறு பறவை என்ன செய்யும்?!
அழுதழுது துடிதுடித்து,
படும் துன்பம் போதுமம்மா!
ஒன்று..
கைநீட்டி கண்ணீர் துடை!
இல்லை..
கைப்பிடித்து என்னைக் கூட்டிச்செல்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)